சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,021 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் தேங்காய் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 60.11- க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 66.40- க்கும் ஏலம் போனது.
தண்ணீா் வற்றிய தேங்காய் கிலோ ரூ.85.25 முதல் ரூ. 90.90 வரை ஏலம் போனது. மொத்தம் 422 கிலோ தேங்காய்கள் ரூ. 27 ஆயிரத்து 811- க்கு விற்பனையானது.