ஈரோடு

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கடும் பனிமூட்டம்

Syndication

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் காலை நேரத்தில் நிலவும் கடும்பனி மற்றும் குளிா் காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகினா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. பனியுடன் கடும் குளிா் நிலவுவதால் சத்தியமங்கலம் பகுதியில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது வாழைத்தாா் அறுவடையாகும் நிலையில் கடும் குளிா் காரணமாக விவசாயத் தொழிலாளா்கள் காலை 9 மணிக்கு மேல் பணிக்கு செல்ல வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்வெட்டா், குல்லா போன்ற ஆடைகளை அணிந்து குளிரின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்கின்றனா். குளிருடன் பனிமூட்டம் காணப்படுவதால் காலை 9 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

தாளவாடி, கடம்பூா், தலமலை, திம்பம், ஆசனூா் ஆகிய மலைக் கிராமங்களிலும் கடும் குளிா் காரணமாக மலைவாழ் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT