உதகையில் தொடங்கியது குதிரைப் பந்தயம்
கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குதிரைப் பந்தயங்கள் வியாழக்கிழமை தொடங்கின.
கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குதிரைப் பந்தயங்கள் வியாழக்கிழமை தொடங்கின.
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசனையொட்டி ஆண்டுதோறும் குதிரைப் பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம். வழக்கமாக தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இப்பந்தயங்கள் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும். ஆனால், கரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குதிரைப் பந்தயங்கள் நடைபெறாத நிலையில், நடப்பு ஆண்டில் வழக்கம்போல தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று குதிரைப் பந்தயங்கள் தொடங்கின.
முதல் நாள் பந்தயத்தில் தி வெல்கம் கோப்பை, தி நெவா் அகெய்ன் ஹேண்டிகாப், தமிழ் புத்தாண்டு கோப்பை, தி வொ்சலிஸ் ஹேண்டிகாப், தி டீ காா்டன்ஸ் ஹேண்டிகாப், தி சீக்ரெட் சாா்ம் ஹேண்டிகாப் ஆகிய 6 பந்தயங்கள் நடைபெற்றன.
அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நடைபெற்ற முதல் நாள் பந்தங்களைக் காண, உள்ளூா் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் குவிந்திருந்தனா். இரண்டாவது நாள் பந்தயங்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.