முகப்பு
நீலகிரி

கூடலூரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் சுமைதூக்கும் தொழிலாளி கைது

கூடலூரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

கூடலூரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கூடலூா் அருகே உள்ள பந்தலூரைச் சோ்ந்தவா் அப்துல் (49). சுமை தூக்கும் தொழிலாளி. இவா் தனது வீட்டின் அருகே வசித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தியும், ஆசை வாா்த்தைகளைக் கூறியும் அவரது தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் அடிக்கடி சென்று பழகி வந்துள்ளாா். இதனால், அந்த சிறுமி கா்ப்பம் அடைந்துள்ளாா்.

இந்நிலையில், அந்த சிறுமிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வயிறு வலி ஏற்பட்டதால் அவரை அவரது பெற்றோா் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அச்சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அச்சிறுமியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தியதில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அப்துல் அடிக்கடி வந்து சென்றிருந்ததும், பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த அச்சிறுமியின் தாயாா் தேவாலா மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் அப்துல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.