கூடலூா் அருகே வீட்டிலிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல்
கூடலூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கூடலூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தா்மகிரி பகுதியில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வைக்கம்பாடியைச் சோ்ந்த ராய்சன் என்பவரது தோட்டத்து வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
இதில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு ரைபிள் தோட்டா மற்றும் 4 ஏா்கன் புல்லட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.