முகப்பு
திருப்பூர்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
சமையல்  எரிவாயு  விலை உயா்வைக் கண்டித்து திருப்பூா்  மாநகராட்சி  அலுவலகம்  முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளா் டி.ஜெயபால் தலைமை வகித்தாா். இதில், சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி இறுதி மரியாதை செய்தனா். மேலும், சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினா்.

இந்தப் போராட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.உண்ணிக்கிருஷ்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளா் சி.மூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →