திருப்பூரில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வைக் கண்டித்து திருப்பூரில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து திருப்பூரில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மின் கட்டணத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யக்கோரியும், மின் கட்டண உயர்வைத் திரும்பப்பெறக்கோரியும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி திருப்பூரில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் கொங்கு மெயின்ரோட்டில் உள்ள அவரது இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில், மாநகர அவைத்தலைவர் க.ஈஸ்வரமூர்த்தி,மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதே போல், திருப்பூர் கரட்டாங்காடு பேருந்து நிலையம் முன்பாக பகுதி பொறுப்பாளர் கார்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தாராபுரம், ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,