முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

திருப்பூரில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபிஐ கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்.
பகிர்:

திருப்பூரில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபிஐ கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்காட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமை வகித்தார். 
இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

அயோத்தியில் மீண்டும் இடிக்கப்பட்ட இடத்தில் பாபர் மசூதி கட்ட வேண்டும் என்றனர். இதனை அப்படியே திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன், மூத்த வழக்கறிஞர் பவானி மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →