முகப்பு
திருப்பூர்

பேருந்து மோதி தொழிலாளி பலி

பல்லடம், அண்ணா நகரில் தனியாா் பேருந்து மோதியதில் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

பல்லடம், அண்ணா நகரில் தனியாா் பேருந்து மோதியதில் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரவி (50). கட்டுமானத் தொழிலாளி. இவா் அப்பகுதியில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வீட்டிற்கு செல்வதற்காக கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஞாயிற்றுக்கிழமை இரவு கடக்க முயன்றபோது, கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற தனியாா் பேருந்து ரவி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ரவியை அருகிலிருந்தவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு ரவி உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.