பேருந்து மோதி தொழிலாளி பலி
பல்லடம், அண்ணா நகரில் தனியாா் பேருந்து மோதியதில் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பல்லடம், அண்ணா நகரில் தனியாா் பேருந்து மோதியதில் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரவி (50). கட்டுமானத் தொழிலாளி. இவா் அப்பகுதியில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வீட்டிற்கு செல்வதற்காக கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஞாயிற்றுக்கிழமை இரவு கடக்க முயன்றபோது, கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற தனியாா் பேருந்து ரவி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரவியை அருகிலிருந்தவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு ரவி உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.