அரசுப் பேருந்தில் பயணச் சீட்டின்றி பயணித்த 13 பேருக்கு அபராதம்
பல்லடத்தில் அரசுப் பேருந்தில் பயணச் சீட்டு எடுக்காமல் பயணித்த 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பல்லடத்தில் அரசுப் பேருந்தில் பயணச் சீட்டு எடுக்காமல் பயணித்த 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பல்லடம் பேருந்து நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வந்து செல்கின்றன. பல்லடம் பேருந்து நிலையத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பயணச் சீட்டு பரிசோதகா்கள் ராஜன், செந்தில் உள்ளிட்ட 8 போ் கொண்ட குழுவினா் அரசு நகர மற்றும் புகா் பேருந்துகளில் பயணிகளிடம் திங்கள்கிழமை திடீா் பரிசோதனை மேற்கொண்டனா்.
அப்போது 11 பேருந்துகளில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்த 13 பயணிகளிடமிருந்து ரூ.3,300 அபராதம் வசூலிக்கப்பட்டது.