முகப்பு
திருப்பூர்

தாராபுரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை

தாராபுரத்தில் இடி, சூறாவளிக்காற்றுடன் வெள்ளிக்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
தாராபுரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை.
பகிர்:

தாராபுரத்தில் இடி, சூறாவளிக்காற்றுடன் வெள்ளிக்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், தாராபுரத்தின பல்வேறு பகுதிகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில் சுமார் ஒன்றரை மணி நேரம் இடி, சூறாவளிக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 

தாராபுரம் நகரில் மணியம்மை நகர், சின்னகடைவீதி, பெரியகடைவீதி, பெரியார் திடல் உள்ளிட்ட பகுதிகளிலும் அதனைச்சுற்றியுள்ள தளவாய்பட்டணம், அலங்கியம், காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. 

இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அதே போல், நகரில் சில பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகினர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →