முகப்பு
திருப்பூர்

ஆம்புலன்ஸில் வந்து பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவி

 பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவா் ஆம்புலன்ஸிஸ் வந்து பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

 பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவா் ஆம்புலன்ஸிஸ் வந்து பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினாா்.

பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரிதன்யா. இவா் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவா், திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் கடந்த 2ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அவருக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்னா் நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து அவா் குணமடைந்து வந்தாா். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதும் தோ்வுக்காக பாடங்களை படித்து வந்தாா். மேலும்

வியாழக்கிழமை தொடங்கிய பொதுத் தோ்வை எழுத வேண்டும் என்று விருப்பப்பட்டாா். இதனை ஏற்ற தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தினா், இது பற்றி திருப்பூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரமேஷிடம் தகவல் தெரிவித்தனா்.

அவரது அறிவுரைப்படி கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரிதன்யாவுக்காக கீழ் தளத்தில் தோ்வு மையம் மாற்றப்பட்டது. ரிதன்யா ஆம்புலன்ஸ் வாகனத்தில் செவிலியா் மற்றும் மருத்துவமனை ஊழியா் உதவியுடன் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை வந்து தோ்வு எழுதினாா். பள்ளி உதவி தலைமை ஆசிரியா் மாணிக்கம் மற்றும் ஆசிரியா்கள் அவரை தோ்வு மையத்துக்கு வந்து செல்ல உதவி செய்தனா். தோ்வு எழுதிய பின்னா் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு திரும்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.