முகப்பு
திருப்பூர்

நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியலில் ரூ.21.62 லட்சம் காணிக்கை

வெள்ளக்கோவில் மாந்தபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியலில் ரூ.21.62 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 9:41 PM
காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.
பகிர்:

வெள்ளக்கோவில் மாந்தபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியலில் ரூ.21.62 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் 6 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் புதன்கிழமை எண்ணப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் செ.வ.ஹா்ஷினி, கோயில் அறங்காவலா் குழு தலைவா் கே.சந்திரசேகரன் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், ரூ.21 லட்சத்து 62 ஆயிரத்து 558 காணிக்கை இருந்தது.

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் வீரப்பன், கோயில் செயல் அலுவலா் மாலதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.