முகப்பு
தருமபுரி

தருமபுரியில் 8 வயது சிறுமி உட்பட இருவருக்கு கரோனா தொற்று உறுதி

தர்மபுரியில் 8 வயது சிறுமி உட்பட இருவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி, ஜூன் 7: தர்மபுரியில் 8 வயது சிறுமி உட்பட இருவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி அடுத்த சோலைக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சென்னையிலிருந்து  சொந்த ஊருக்கு சனிக்கிழமை திரும்பினர். அவர்களுக்கு தருமபுரி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கரோனா பரிசோதனை சிறப்பு மையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சோதனை முடிவில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, 62 வயது முதியவர் ஆகிய இருவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு தொற்றுக்கான புற அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்த இருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கரோனா சிகிச்சைக்கான சிறப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்ற 8 நபர்களும் செட்டிக்கரை மையத்தில் தொடர்ந்து தனிமைபடுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →