பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்கு தருமபுரி வருகை
பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக திங்கள்கிழமை தருமபுரிக்கு வருகை தந்தார்.
பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக திங்கள்கிழமை தருமபுரிக்கு வருகை தந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் தற்போது பரோலில் தனது வீட்டில் இருந்து வருகிறார். சிறுநீரகக் கோளாறு காரணமாக அவ்வப்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிக்க- மாநிலங்களில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை
இந்தநிலையில் சிறுநீரகம் தொடர்பாக மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக போலீஸார் பாதுகாப்புடன் தருமபுரி நேதாஜி புறவழிச்சாலை உள்ள தனியார் ஆய்வகம் மற்றும் மருத்துமனைக்கு வந்தார்.
அங்கு பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருடன் அவரது தாயார் அற்புதம்மாள் உடனிருந்தார்.