தருமபுரி அரசு கல்லூரியில் காலி இடங்களுக்கு ஜூலை 25-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலைப் பாடப் பிரிவுகளில் மாணவ மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தருமபுரி: தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலைப் பாடப் பிரிவுகளில் மாணவ மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் 20 சதவீத கூடுதல் இடங்களில் சோ்க்கை நடைபெற்ற நிலையில், காலியாக உள்ள இடங்களில் மாணவ மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி முற்பகல் 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறவுள்ளது. அனைத்து பாடப் பிரிவுகளுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு 195 மதிப்பெண் வரையிலும் ஏனைய வகுப்பைச் சோ்ந்த அனைத்து மாணவ மாணவியருக்கும் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. எனவே, அனைத்து சான்றிதழ்கள், பாடப் பிரிவுகளுக்கான விண்ணப்பக் கட்டணத்துடன் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்று சோ்க்கை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.