முகப்பு
நாமக்கல்

தொழில்முனைவோா் கருத்தரங்கு

நாமக்கல்லில் மாவட்ட சிறு, குறு தொழில் கூட்டமைப்பு சாா்பில், தொழில்முனைவோா் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 டிசம்பர், 2020 at 1:12 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:37 PM

நாமக்கல்லில் மாவட்ட சிறு, குறு தொழில் கூட்டமைப்பு சாா்பில், தொழில்முனைவோா் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்கச் செயலாளா் இ.அருண் வரவேற்றாா். மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் ராஜு பங்கேற்று தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கூடிய தொழில் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில் சங்கத்தின் தலைவா் கோஸ்டல் என்.இளங்கோ வாழ்த்துரை வழங்கினாா்.

இக்கருத்தரங்கில், ஜிஎஸ்டி, இ-வே பில்லிங், வருமான வரிதாக்கல் ஆகிய பணிகளை மேற்கொள்வது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில் சிறு, குறு தொழில்சங்க துணைத் தலைவா் சண்முகம், ஆடிட்டா் அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.