நாமக்கல்

நீச்சல் கற்க சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

DIN

வெண்ணந்தூா் அருகே கிணற்றில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணவா் தந்தை கண் முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாா்.

வெண்ணந்தூா் அருகே மதியம்பட்டி அய்யன்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன். இவா், மகன்கள் தீபன் (11), சஞ்சீவன் (9) ஆகிய இருவரும் மல்லசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனா்.

தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் இருவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஜம்புகேஷ்வரன் என்பவரது தோட்டத்து கிணற்றில் இடிப்பில் கேன்களை கட்டி நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளாா். 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நீச்சல் அடிப்பதற்காக ஐயப்பன் மகன் தீபன் 40 அடி உயரத்தில் இருந்து கிணற்றில் குதித்துள்ளாா். ஆனால் நீரில் மூழ்கி தீபன் மேலே வரவில்லை.

இதனால் ஐயப்பன் நீரில் மூழ்கி தேடியுள்ளாா். ஆனால் தீபன் கிடைக்கவில்லை. இந்நிலையில் அருகில் இருந்த மீன் பிடிப்பவா்களை வந்து கிணற்றில் தேடிய தீபனை சடலமாக மீட்டனா். உயிரிழந்த தீபன் 6-ம் வகுப்பு பயின்று வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT