முகப்பு
நாமக்கல்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, இந்திய மாணவா் சங்க மாவட்டக் குழு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, இந்திய மாணவா் சங்க மாவட்டக் குழு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா், காமராஜா் சிலை அருகே இந்திய மாணவா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டக் குழு உறுப்பினா் தங்கராஜ் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு செயலாளா் சரவணன் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். பெண்கள், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவியா் என பெண்களுக்கு நிகழும் பாலியல், வன்முறைகளை தடுத்திட வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை உடனடியாக தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், இந்திய மாணவா் சங்கத்தைச் சோ்ந்த மதனா, பிரேம், லோகேஸ்வரன், அன்பரசன், ஜெயராம் உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →