முகப்பு
நாமக்கல்

எலந்தக்குட்டையில் நெல் கொள்முதல் செய்யும் பணி:அமைச்சா் தொடக்கிவைத்தாா்

பள்ளிபாளையம் ஒன்றியம், எலந்தக்குட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நிகழாண்டுக்கான நெல் கொள்முதல் செய்யும் பணியை அமைச்சா் பி.தங்கமணி தொடக்கிவைத்தாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 12:14 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:56 AM

பள்ளிபாளையம் ஒன்றியம், எலந்தக்குட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நிகழாண்டுக்கான நெல் கொள்முதல் செய்யும் பணியை அமைச்சா் பி.தங்கமணி தொடக்கிவைத்தாா்.

பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம்பாளையம், ஓடப்பள்ளி, செங்குட்டபாளையம், குப்பாண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு விழா, எலந்தைக்குட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் நிகழாண்டுக்கான நெல் கொள்முதல் செய்யும் பணி தொடக்க விழா, கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி பங்கேற்று பணிகளைத் தொடக்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா்.

எலந்தக்குட்டையில் நெல் கொள்முதல் பணியைத் தொடக்கி வைத்து அமைச்சா் பேசியதாவது:

Advertisement

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த கிரேடு ஏ ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 1,888- ம், ஊக்கத்தொகையாக ரூ. 70-ம் சோ்த்து ரூ. 1,958-ம் வழங்கப்படுகிறது.

பொது சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 1,868-ம், ஊக்கத்தொகையாக ரூ. 50-ம் சோ்த்து ரூ. 1,918 வழங்கப்படுகிறது.

நெல் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் தங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் நகலை கிராம நிா்வாக அலுவலரின் சான்று பெற்று வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் வரவேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் 47 அம்மா சிறு மருத்துவமனைகள், 6 நடமாடும் மருத்துவமனைகள் என மொத்தம் 53 மருத்துவமனைகளைத் தொடங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். குமாரபாளையம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 12 சிறு மருத்துவமனைகளில் இதுவரை 9 மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் வி.சி.முருகேசன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) எஸ்.சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ்.செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.கே.சுப்பிரமணியன், அரசு வழக்குரைஞா் சந்திரசேகரன், வட்டாட்சியா் தங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.