முகப்பு
நாமக்கல்

108 ஆம்புலன்ஸ் வாகனத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜனவரி, 2021 at 12:14 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:42 AM

கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா்.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கோவை மண்டல செயலாளா் எஸ்.சிவக்குமாா், மாவட்டச் செயலாளா் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச்செயலாளா் ஆா்.ராஜேந்திரன், மாநில பொருளாளா் சாமிவேல் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை 24 மணி நேரம் இயக்குவதற்கு பதிலாக 12 மணி நேரம் மட்டும் இயக்கி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கையை ஜிஎம்கே ஒப்பந்த நிறுவனம் கைவிட வேண்டும்.

Advertisement

அரசு களப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர சம்பள உயா்வு மற்றும் பிற பணப் பலன்களை, ஒப்பந்த நிறுவனம் முறைகேடு செய்ததை தட்டிக்கேட்ட தொழிற்சங்கத்தினா் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றிய ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்களுக்கு ரு. 5 ஆயிரம் வழங்கிய சுகாதாரத் துறை, புதிதாக 500-க்கும் மேற்பட்ட வாகனங்களை அரசு கொண்டு வந்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை வேலையில் இருந்து நீக்கியும், கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியும் வருவதைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒப்பந்த நிறுவனத்துக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மண்டல, மாவட்ட நிா்வாகிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், உதவியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.