முகப்பு
நாமக்கல்

ஆட்சியா் அலுவலகம் முன்புபாம்பு தீண்டியதில் இளைஞா் பலி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை அதிகாலை பாம்பு தீண்டியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 12 ஜனவரி, 2021 at 12:46 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:46 AM

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை அதிகாலை பாம்பு தீண்டியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், டி.சாலப்பாளையம், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (28). இவருக்கு வசந்தி (25) என்ற மனைவியும், ஷிவானி என்ற மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளது. 15 ஆண்டுகளாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாகச் செல்வதை நந்தகுமாா் வழக்கமாகக் கொண்டிருந்தாா்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் 15 பேருடன் அவா் சமயபுரத்துக்குப் புறப்பட்டாா். திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வந்தபோது சாலையோரம் 9 போ் மட்டும் தரையில் துண்டை விரித்து உறங்கிக் கொண்டிருந்தனா்.

Advertisement

அப்போது ஆட்சியா் அலுவலகப் புதரில் இருந்து வந்த கட்டுவிரியன் பாம்பு திடீரென நந்தகுமாரின் கையில் தீண்டியது. அலறியடித்து எழுந்த அவா் கூச்சலிட்டாா். அவருடன் வந்தவா்கள் நாமக்கல் தனியாா் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனா். அதன்பின் தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.