முகப்பு
சேலம்

100 ஆண்டுகள் பழமையான புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஆத்தூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:

ஆத்தூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு  குழந்தை ஏசுவை வழிபட்டு அன்பை பரிமாரிக் கொண்டனர்.


இயேசுபிரான் அவதரித்த டிசம்பர் 25 ஆம் தேதி தினத்தன்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது வழக்கம். இதனையடுத்து, இந்தாண்டும் நாளை வெள்ளிக்கிழமை கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ளனர்.தமிழகத்தை பொறுத்தவரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

அந்தவகையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் குழந்தை இயேசு பிறப்பை எடுத்துரைக்கும் விதமாக குடில் அமைத்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

 மேலும், ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள உயரமான கிறிஸ்துமஸ் மரங்களும் மின் விளக்குகள் பளிச்சிட கண்ணைக் கவர்ந்த வண்ணமாக காணப்பட்டது,

 அதைத் தொடர்ந்து இரவு தொடங்கிய சிறப்பு பாடல் கிறிஸ்மஸ் பெருவிழா மிகச் சிறப்பாக பங்குத்தந்தை அருட்பணி கிரகோரி ராஜன் அவர்கள் தலைமையிலும் உதவி பங்கு தந்தை அருட்பணி மெசியா அவர்களும் இணைந்து கிறிஸ்துமஸ் பெரு விழா திருப்பலியை நிறைவேற்றி ஆலய வளாகத்தில்  குழந்தை இயேசுவை ஊர்வலமாக வலம் எடுத்து வந்து அங்கு உள்ள கிறிஸ்மஸ் குடிலில் வைத்து மந்திரித்து  கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை  கிறிஸ்துவ மக்களுக்கு தெரிவித்தனர்.

இந்த சிறப்பு திருப்பலி ஆராதனையில் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு புத்தாடை உடுத்தியும், இனிப்புகளை பகிர்ந்துகொண்டும்  கிறிஸ்து பிறப்பை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →