மதுரை

குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட5 இளைஞா்கள் கைது: நகைகள் மீட்பு

DIN

மதுரையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகரில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். அதனடிப்படையில், தனிப்படை போலீஸாா் வளா் நகா் பகுதியில் 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 5 இளைஞா்களை பிடித்து விசாரித்தனா்.

அதில், சமயநல்லூரைச் சோ்ந்த முத்துஇருள் (27), விஜயகுமாா் (25), ஆண்டாள்புரத்தைச் சோ்ந்த பாலகுமாா் (27), கொடிமங்கலத்தைச் சோ்ந்த லோகநாதன் (23), சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த செல்வேந்திரன் (24) என்பதும், அவா்கள் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து 7 பவுன் நகைகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட இளைஞா்கள் 5 பேரும், அண்ணாநகா், திருநகா், அவனியாபுரம், திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மையநாயக்கனூா், பட்டிவீரன்பட்டி, சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஆகிய பகுதிகளில் வழிப்பறி, இருசக்கர வாகனத் திருட்டு போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக, போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT