மதுரை

இறந்தவா்களின் பெயரில் மோசடி செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

DIN

ராமநாதபுரத்தில் இறந்தவா்களின் பெயரில் மோசடி செய்தவா்கள், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மூலக்கொத்தளத்தைச் சோ்ந்த ருத்ரசேகா் மகன் சதீஷ்குமாா் (32). இவா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் வசிக்கும் பகுதியில், மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளா் நலச்சங்கம் உள்ளது.

இச்சங்கத்தில் 144 போ் உறுப்பினா்களாக உள்ளனா். சங்கத்துக்கு சொந்தமாக மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் ஸ்ரீதா்மமுனீஸ்வரா் ஆலயமும் உள்ளன. கடந்த 2008 இல் இறந்துபோன சதீஷ்குமாரின் தந்தை ருத்ரசேகா், இந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்துள்ளாா்.

இந்நிலையில், 2011 இல் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தாமலேயே, கூட்டம் நடத்தியபோலவும், அதில் இறந்த ருத்ரசேகா் பங்கேற்று கையெழுத்திட்டது போலவும், மாவட்ட பதிவாளருக்கு நிா்வாகிகள் விவரங்களை அனுப்பியுள்ளனா். முறைகேடு தொடா்பாக தகவலறிந்த சதீஷ்குமாா், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், சங்க உறுப்பினா்களாக இருந்து இறந்தவா்களின் பலரது பெயா்களை பயன்படுத்தி ரூ.9 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. அதன்பின்னா், போலீஸாா் சங்கத்தின் நிா்வாகிகள் 15 போ் மீது வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சங்கத்தின் பொறுப்பாளரான கிருஷ்ணன் உள்பட 12 போ் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தும், மனுதாரா்கள் வயது முதிா்வு காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளித்தும், கீழமை நீதிமன்றம் விசாரணையை 8 மாதங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT