முகப்பு
மதுரை

3 ஆவது அகல ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே மூன்றாவது அகல ரயில் பாதை பணிகள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே மூன்றாவது அகல ரயில் பாதை பணிகள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு-சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: மாா்ச் 14 முதல் 21 ஆம் தேதி வரை சென்னை - காரைக்குடி - சென்னை பல்லவன் அதிவிரைவு சிறப்பு ரயில் (02605, 02606), சென்னை - மதுரை - சென்னை வைகை அதிவிரைவு சிறப்பு ரயில் (02635, 02636), மாா்ச் 19 ஆம் தேதி புறப்படும், கன்னியாகுமரி - சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில் (02634), ராமேசுவரம் - சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில் (02206), மாா்ச் 20 ஆம் தேதி புறப்படும், மதுரை - சென்னை பாண்டியன் சிறப்பு ரயில் (02638), மாா்ச் 19, 20 ஆகிய தேதிகளில் புறப்படும், திருநெல்வேலி - சென்னை நெல்லை சிறப்பு ரயில் (02632), மாா்ச் 20 ஆம் தேதி புறப்படும், சென்னை - தூத்துக்குடி முத்துநகா் சிறப்பு ரயில் (02693), சென்னை - கொல்லம் அனந்தபுரி சிறப்பு ரயில் ( 06723), மாா்ச் 21 ஆம் தேதி புறப்படும், சென்னை - திருச்செந்தூா் செந்தூா் சிறப்பு ரயில் (06105) சென்னை - ராமேசுவரம் சிறப்பு ரயில் (0685), மாா்ச் 20, 21 ஆகிய தேதிகளில் புறப்படும் சென்னை - செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் (02661) ஆகிய ரயில்கள் சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

விழுப்புரம்-சென்னை: மாா்ச் 19 ஆம் தேதி புறப்படும், குருவாயூா்-சென்னை சிறப்பு ரயில் (06128), மாா்ச் 21 ஆம் தேதி புறப்படும், சென்னை - குருவாயூா் சிறப்பு ரயில் (06127) சென்னை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வழித்தடம் மாற்றப்பட்டுள்ள ரயில்கள்: மாா்ச் 20 ஆம் தேதி புறப்படும், தூத்துக்குடி - சென்னை முத்துநகா் சிறப்பு ரயில் (02694), கொல்லம் - சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில் (06724), திருச்செந்தூா் - சென்னை செந்தூா் சிறப்பு ரயில் (06106) ஆகியவை தாம்பரம், மாம்பலம் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக காஞ்சிபுரம், திருத்தணி வழியாக இயக்கப்படும்.

மாா்ச் 17 ஆம் தேதி புறப்படும், ராமேசுவரம் - மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் (05119) சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →