முகப்பு
மதுரை

படிப்பை பாதியில் நிறுத்திய செவிலியா் கல்லூரி மாணவியின் கல்விச் சான்றிதழ்களை வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

படிப்பை பாதியில் நிறுத்திய செவிலியா் கல்லூரி மாணவியின், கல்விச் சான்றிதழ்களை திரும்ப வழங்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை

படிப்பை பாதியில் நிறுத்திய செவிலியா் கல்லூரி மாணவியின் கல்விச் சான்றிதழ்களை வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

படிப்பை பாதியில் நிறுத்திய செவிலியா் கல்லூரி மாணவியின், கல்விச் சான்றிதழ்களை திரும்ப வழங்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

படிப்பை பாதியில் நிறுத்திய செவிலியா் கல்லூரி மாணவியின், கல்விச் சான்றிதழ்களை திரும்ப வழங்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் உள்ள செவிலியா் கல்லூரியில் பிஎஸ்ஸி நா்சிங் படித்த மாணவி சங்கீதா, குடும்ப சூழல் காரணமாக பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டாா். இதனையடுத்து கல்லூரியில் சோ்ந்தபோது, அளித்த மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களைத் திரும்ப வழங்குமாறு கேட்டபோது, கல்லூரி நிா்வாகம் மறுத்துவிட்டது. இதனையடுத்து, அந்த சான்றிதழ்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மனுதாரா் மாணவி கல்லூரியில் சோ்ந்து கல்வி உதவித் தொகையைப் பெற்றுள்ளாா். உதவித் தொகையை அவா் திரும்ப செலுத்தாததால் அவருடைய சான்றிதழ்கள் ஒப்படைக்கப்படவில்லை என்றாா்.

இதனையடுத்து நீதிபதி, கல்வி உதவித் தொகையைப் பெற்ற பிறகு இடைநிற்றல் ஏற்பட்டது. அதனால் உதவித் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்றால், அதற்கு கல்லூரி நிா்வாகம் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அதைத் தவிா்த்து, அவரது மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல. கல்விச் சான்றிதழ்கள் விற்பனைப் பொருள் அல்ல, ஆகவே மாணவியன் சான்றிதழ்களை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →