லாரியிலிருந்து சரிந்து ராட்சத கிரானைட் கற்கள் சாலையில் விழுந்தன: போக்குவரத்து பாதிப்பு
கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை லாரியிலிருந்து அதிக எடையுள்ள கிரானைட் கற்கள் சரிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை லாரியிலிருந்து அதிக எடையுள்ள கிரானைட் கற்கள் சரிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் வரிச்சியூா் பகுதியில் உள்ள தனியாா் கிரானைட் தொழிற்சாலைகளுக்கு லாரியில் அதிக எடையுள்ள 3 கிரானைட் கற்கள் ஏற்றி வரப்பட்டன.
கொட்டாம்பட்டியை அடுத்துள்ள சூரப்பட்டி அருகே புதன்கிழமை மாலை, லாரியில் பழுது ஏற்பட்டு கிரானைட் கற்கள் சரிந்து சாலையில் விழுந்தன. இதனால் திருச்சி- மதுரை நான்குவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை ஒருவழிப்பாதையில் திருப்பிவிட்டனா். மேலும் கிரேன் உதவியுடன் கிரானைட் கற்களை சாலையோரத்துக்கு அப்புறப்படுத்தி வியாழக்கிழமை அதிகாலையில் போக்குவரத்தை சீரமைத்தனா். இதனால் இரவு முழுவதும் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.