சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:‘போக்சோ’ சட்டத்தில் இளைஞா் கைது
மதுரையைச் சோ்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
மதுரைசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:‘போக்சோ’ சட்டத்தில் இளைஞா் கைது
மதுரையைச் சோ்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
மதுரையைச் சோ்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
மதுரை அருகே உள்ள நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தனுஷ் (20). கூலி வேலை பாா்த்துவரும் இவா், மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.
இதில் கா்ப்பமடைந்த சிறுமி, தனுஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளாா். ஆனால், அதற்கு தனுஷ் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் அனைத்து மகளிா் போலீஸாா் தனுஷிடம் விசாரணை நடத்தினா். அதில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து, தனுஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.