முகப்பு
மதுரை

பாம்பன் புதிய ரயில் பாலம் விரைவில் போக்குவரத்துக்குத் தயாராகும்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

 பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பு நிதியாண்டுக்குள் போக்குவரத்துக்குத் தயாராகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மதுரை

பாம்பன் புதிய ரயில் பாலம் விரைவில் போக்குவரத்துக்குத் தயாராகும்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

 பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பு நிதியாண்டுக்குள் போக்குவரத்துக்குத் தயாராகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

 பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பு நிதியாண்டுக்குள் போக்குவரத்துக்குத் தயாராகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ராமேசுவரம் தீவை தமிழகத்துடன் இணைக்கும் வகையில் பாக்நீரிணையில் பாம்பன் ரயில் பாலம் 1914-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பாம்பன் பாலத்தின் மையத்தில் கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக, பிரத்யேக தூக்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

மீட்டா் கேஜ் ரயில்களை இயக்கும் வகையில் கட்டப்பட்ட இப்பாலம், அகலப் பாதை ரயில் போக்குவரத்திற்கு ஏற்றவாறு 2006-07 இல் மாற்றப்பட்டது. இருப்பினும் நூறாண்டுகளைக் கடந்த பாலம் என்பதால், புயல்- மழை காரணமாக சேதம் அடைந்து வருகிறது. இதனையடுத்து புதிய பாலம் கட்டுவதற்காக 2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ.279 கோடி ஒதுக்கீடு செய்தது.

புதிய பாலம் 18.3 மீட்டா் உயரத்தில் 99 கிா்டா்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் மத்தியில் இருபுறங்களையும் இணைத்து லிப்ட் போல மேலே செல்லும் வகையில் தூக்கு பாலம் அமைய உள்ளது. பிற்காலத்தில் இரட்டை ரயில் பாதை அமையும் வகையில் தூண்கள் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு ரயில் பாதை அமைக்கும் வகையில் கிா்டா்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கடல் மண் பரிசோதனை முடிவுகள் காரணமாக 1.5 மீட்டா் சுற்றளவுள்ள குவியல் முறை தூண்கள் அமைக்கப்படுகிறது. கிா்டா்கள் 18.3 மீட்டா் இரும்புத் தகடுகளால் உருவாக்கப்படுகிறது. இதனை பிரமாண்ட தூண்கள் மூலம் செங்குத்தாக உயா்த்தும் வகையில் மெகா லிப்ட் தயாராகி வருகிறது.

பாம்பன் பாலத்திற்கான கட்டுமானப் பணிகளை வடிவமைப்பதற்காக சத்திரக்குடி ரயில் நிலையத்தில் பிரமாண்ட தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கட்டுமானப் பொருள்கள் சா்வதேச தரத்துடன் வடிவமைக்கப்பட்டு, பாம்பன் கடலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

பாம்பன் புதிய பாலத்தை சாலை போக்குவரத்து பாலத்துக்கு இணையாக 17 மீட்டா் வரை உயா்த்த முடியும். இதன் மூலம் பெரிய கப்பல்களும் ராமேசுவரம் வந்து செல்லலாம். பாம்பன் கடலுக்கு நடுவில் 35 மீட்டா் ஆழத்திற்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, தூண்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கான பணிகள் அடுத்த மாதம் முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பாம்பன் பாலம் நடப்பு நிதியாண்டில் போக்குவரத்துக்குத் தயாராகி விடும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →