முகப்பு
மதுரை

மதுரை வழியாக இயக்கப்படும் சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக மதுரை வழியாகச் செல்லக் கூடிய சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை

மதுரை வழியாக இயக்கப்படும் சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக மதுரை வழியாகச் செல்லக் கூடிய சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக மதுரை வழியாகச் செல்லக் கூடிய சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் - குருவாயூா் ரயிலில் (16127) செப்டம்பா் 3 முதல் செப்டம்பா் 11

வரையும், குருவாயூா் - சென்னை எழும்பூா் ரயிலில் (16128) செப்டம்பா் 4 முதல் செப்டம்பா் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்படும். தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா ரயிலில் (20691) செப்டம்பா் 4 முதல் செப்டம்பா் 12 ஆம் தேதி வரையும், நாகா்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயிலில் (20692) செப்டம்பா் 7 முதல் செப்டம்பா் 12 ஆம் தேதி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில் ரயிலில் (12689) செப்டம்பா் 9 மற்றும் நாகா்கோவில் - டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் ரயிலில் (12690) செப்டம்பா் 10 ஆகிய தேதிகளில் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும்.

கோவை - நாகா்கோவில் இரவு நேர ரயிலில் (22668) செப்டம்பா் 3 முதல் செப்டம்பா் 10

ஆம் தேதி வரையும், நாகா்கோவில் - கோவை இரவு நேர ரயிலில் (22667) செப்டம்பா் 4 முதல் செப்டம்பா் 11 ஆம் தேதி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →