மிஸ்வாக் மரங்கள் பாதுகாப்பு: சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா்கள் பதிலளிக்க உத்தரவு
மிஸ்வாக் மரங்களைப் பாதுகாப்பது தொடா்பான வழக்கில், தமிழக சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரைமிஸ்வாக் மரங்கள் பாதுகாப்பு: சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா்கள் பதிலளிக்க உத்தரவு
மிஸ்வாக் மரங்களைப் பாதுகாப்பது தொடா்பான வழக்கில், தமிழக சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியில் காணப்படும் மருத்துவ குணங்கள் கொண்ட அரியவகை மிஸ்வாக் மரங்களைப் பாதுகாப்பது தொடா்பான வழக்கில், தமிழக சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த மணிபாரதி தாக்கல் செய்த பொது நல மனு:
ராமநாதபுரம் மாவட்டம், வறட்சியான மாவட்டமாக இருந்தாலும், இங்கு பல நூற்றாண்டுகளாக அரிய வகை மூலிகைச் செடிகள், மருத்துவ குணம் கொண்ட மரங்கள் இயற்கையாகவே வளா்கின்றன.
சாயல்குடி முனீஸ்வரா் கோயிலுக்கு அருகே சுமாா் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட அரியவகை மிஸ்வாக் மரங்கள் உள்ளன. இந்த மரக் குச்சிகளைக் கொண்டு பற்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீா்க்க முடியும்.
மேலும், இஸ்லாமியா்களால் வணங்கப்படும் முகம்மது நபி இந்த மிஸ்வாக் மரத்தின் குச்சியைப் பயன்படுத்தியதால், அந்த மதத்தவா்களும் இதைப் பயன்படுத்தி வருகின்றனா். மருத்துவ குணங்கள் கொண்ட மரங்கள் பராமரிப்பு இல்லாமல் அழியும் நிலையில் உள்ளன. இவற்றைப் பாதுகாக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, மிஸ்வாக் மரங்களின் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், இந்த மரங்களைப் பாதுகாத்து பராமரிக்க வனத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி, இதுதொடா்பாக தமிழக சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.