முகப்பு
மதுரை

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்: அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆவணங்களை குற்றவியல் நீதிபதி அறிக்கையாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்: அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆவணங்களை குற்றவியல் நீதிபதி அறிக்கையாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்டவா் மீதான குற்ற நடவடிக்கைகள், அதுகுறித்த ஆவணங்களை குற்றவியல் நீதிபதி அறிக்கையாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் தாக்கல் செய்த மனு:

அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை ஏஎஸ்பி பல்வீா் சிங் பிடுங்கி சித்திரவதை செய்தாா். இந்த சித்திரவதைக்கு நானும் இலக்கானேன். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் என் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை, கைது செய்யப்பட்டதற்கான காரணம், மருத்துவப் பரிசோதனை, சிறையில் அடைத்ததற்கான சான்று, நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விவரங்களைத் தரக் கோரி அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.

அப்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, எனது மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, என் மீது பதியப்பட்ட குற்ற வழக்கின் அனைத்து விவரங்களையும் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றம் வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி. இளங்கோவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:

இந்த வழக்கில் மனுதாரரின் பற்களைப் பிடுங்கி காவல் துறையினா் கடும் குற்றச்செயலில் ஈடுபட்டனா். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மனுதாரரான அருண்குமாா் சாா்பில், வழக்கு ஆவணங்களைத் தரக் கோரி அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இது சட்டவிரோதம், ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி உரிய ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.

இதைப் பதிவு செய்த நீதிபதி, பாதிக்கப்பட்ட அருண்குமாா் தாக்கல் செய்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?. அவரது மனு நிராகரிக்கப்பட்டதா அல்லது திருப்பி அனுப்பப்பட்டதா?. இதுகுறித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி வெள்ளிக்கிழமை (ஏப். 21) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →