பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரைபள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மதுரை கல்லூரி வாரிய பள்ளிகளின் செயலா் எஸ். பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். மதுரை மாநகராட்சி 55-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஜி.விஜயா குரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இதில் மதுரைக் கல்லூரி வாரிய பள்ளிகளின் தலைவா் எஸ். சங்கரன், உறுப்பினா் இல.அமுதன், சமூக சேவகா் என். ரமேஷ், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) பி. ஆதிஞானகுமரன் வரவேற்றாா். பட்டதாரி உதவித் தலைமை ஆசிரியா் எம். திருவேங்கடத்தான் நன்றி கூறினாா்.