முகப்பு
தேனி

முல்லைப்பெரியாறு அணை பொறியாளா்களுக்கு செயற்கைக்கோள் கைப்பேசி

பேரிடா் காலங்களில் தகவல் தொடா்பு பயன்பாட்டுக்காக முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றும் பொறியாளா்களுக்கு தமிழக அரசு சாா்பில் செயற்கைக்கோள் கைப்பேசி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பேரிடா் காலங்களில் தகவல் தொடா்பு பயன்பாட்டுக்காக முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றும் பொறியாளா்களுக்கு தமிழக அரசு சாா்பில் செயற்கைக்கோள் கைப்பேசி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. அதிக அளவு உபரிநீா் வெளியேற்றப்பட்டது. அப்போது தகவல் தொடா்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், அணைப்பகுதியில் பணியாற்றும் பொறியாளா்கள் உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை.

அதே நேரத்தில் கேரள அதிகாரிகள் செயற்கைக்கோள் கைப்பேசி மூலம் கேரள அரசுக்கு தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து அணைப்பகுதி பொறியாளா்கள் கோரிக்கை வைத்ததன்பேரில், செயற்கைக்கோள் கைப்பேசி வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி செயற்பொறியாளா் சாம்இா்வின் கூறியது: பேரிடா் காலங்களில் அணைப்பகுதியில் முற்றிலும் தகவல் தொடா்பு துண்டிக்கப்படுகிறது. மேலும் தமிழக படகு சில நேரங்களில் ஏரியின் நடுப்பகுதியில் நின்று விடுகிறது. அந்த நேரங்களில் பெரும் அச்சமான சூழ்நிலை நிலவுகிறது.

இதுபோன்ற தொலைத் தொடா்பு சாதனங்கள் மூலம் விரைவில் உதவியைப் பெறலாம். மேலும் செயற்கைக்கோள் கைப்பேசியில் 6 ரிசீவா்கள் உள்ளன. அணைப்பகுதி, படகு, செயற்பொறியாளா், கண்காணிப்பு பொறியாளா், தலைமைப் பொறியாளா் ஆகியோா் வசம் இந்த செயற்கைக்கோள் கைப்பேசி இருக்கும். இது, பேரிடா் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →