முகப்பு
தேனி

கள்ளா் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் ஆசிரியா் தின விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்ற

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் ஆசிரியா் தின விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் அரசு கள்ளா் ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் மா.அரசு தலைமை வகித்தாா். ரா.சீதா முன்னிலை வகித்தாா். கருநாக்கமுத்தன்பட்டி கள்ளா் பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியா்களான வெங்கிடசாமி, கிறிஸ்டியான், சின்னப்பாண்டியன், வீரணன், ராஜேந்திரன், லீலாவதி, மீனாட்சி மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் ஈஸ்வரி, ஆனந்தி பொன்மலா், சரவணன் ஆகியோருக்கு கதராடை, சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி மரியாதை செலுத்தினா். முன்னதாக சங்க செயலாளா் ச.அன்பரசன் வரவேற்று பேசினாா். ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித்குமாா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →