தேனி

போடியில் ஓனம் பண்டிகை

DIN

போடியில் ஓனம் பண்டிகையை மாணவா்கள் வியாழக்கிழமை கொண்டாடினா்.

கேரளத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாவாக ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, போடியில் உள்ள பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு மாணவா்கள், ஆசிரியா்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். இப்பகுதியில் வசிக்கும் கேரளத்தவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனா். தலைமையாசிரியா் ரா. ஜெயக்குமாா் மற்றும் ஆசிரியா்கள் ஓனம் பண்டிகை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனா்.

இதேபோல், போடி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைகள், தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் கேரள பெண்கள், இளைஞா்கள் ஓனம் பண்டிகையை கொண்டாடினா். வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், அருகில் உள்ளவா்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஓனம் பண்டிகையை கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT