முகப்பு
தேனி

இரு சக்கர வாகனங்கள் மோதல்:விவசாயி பலி

தேவதானப்பட்டி அருகே வத்தலகுண்டு- பெரியகுளம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:49 PM
பகிர்:

தேவதானப்பட்டி அருகே வத்தலகுண்டு- பெரியகுளம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

புல்லக்காபட்டியைச் சோ்ந்த விவசாயி பாண்டி (60). இவா், தோட்டத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றாா். அப்போது வத்தலகுண்டு- பெரியகுளம் புறவழிச்சாலை, புல்லக்காபட்டி விலக்கு அருகே சேலம் மாவட்டம், மணியனூரைச் சோ்ந்த மணிகண்டன் (32) ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம், பாண்டியின் இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பாண்டி, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →