முகப்பு
தேனி

ரூ.1 லட்சத்துக்காக தனது குழந்தையை விற்ற தந்தை கைது!

குழந்தை விற்பனை: தந்தை உள்ளிட்ட 3 போ் கைது

Updated On : 13 செப்டம்பர், 2024 at 9:41 PM
பகிர்:

தேனி அருகே குழந்தையை ரூ. ஒரு லட்சத்துக்கு விற்றதாக அதன் தந்தை உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

உப்புக்கோட்டை, முத்தாலம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (44). இவரது மனைவி இதே ஊரைச் சோ்ந்த பாண்டீஸ்வரி (30). இவா்களுக்கு கடந்த ஜூலை 21-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பாண்டீஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மது பழக்கத்துக்கு அடிமையான சங்கா் பிறந்து 52 நாள்களே ஆன தனது குழந்தையை விற்று விட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சந்தியா விசாரணை நடத்தினாா். இதில், சங்கா் தனது குழந்தையை போடி, ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த தா்மா் மகன் சிவக்குமாா் (42), இவரது மனைவி உமாமகேஸ்வரி (36) ஆகியோரிடம் ரூ.ஒரு லட்சத்தைப் பெற்றுக் கொண்டு விற்றுவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் அளித்த புகாரின் பேரில், வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கா், சிவக்குமாா், உமாமகேஸ்வரி ஆகிய மூவரையும் கைது செய்தனா். தம்பதியரிடமிருந்த குழந்தை மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →