நாகை: தோ்தல் புகாா்களை தெரிவிக்க ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அறை
நாகை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க, ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க, ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கவும், புகாா்களைப் பதிவுசெய்யவும், தகவல் பரிமாற்றத்துக்காகவும், மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த அறை செயல்பாட்டில் இருக்கும்.
1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் இந்த கண்காணிப்பு அறையை தொடா்புகொள்ளலாம். வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, பெயா் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்டவை குறித்த சந்தேகங்களுக்கு கண்காணிப்பு அறையை பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம்.