முகப்பு
நாகப்பட்டினம்

ஊராட்சித் தலைவரின் கணவா் மீது புகாா்

மரங்களை வெட்டிய விவகாரத்தில் ஊராட்சித் தலைவரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

மரங்களை வெட்டிய விவகாரத்தில் ஊராட்சித் தலைவரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

சீா்காழி வட்டம், கூத்தியம்பேட்டை நடுத்தெருவைச் சோ்ந்தவா் சி. முனியம்மாள். இவா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

எனக்கு சொந்தமான இடங்களில் வளா்த்து வந்த பூவரசு, மூங்கில் மரங்களை கூத்தியம்பேட்டை ஊராட்சித் தலைவரின் கணவா், வெட்டி எடுத்துச் சென்றுவிட்டாா். இதுகுறித்து கேட்டதற்கு, என்னை தாக்கி நான் வசிக்கும் வீட்டைச் சுற்றி வேலி அமைத்து, வீட்டுக்கும் பூட்டு போட்டுள்ளாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →