முகப்பு
நாகப்பட்டினம்

வள்ளுவா் சமூகத்தை அடையாளப்படுத்தக் கோரிக்கை

வள்ளுவா் சமூக மக்களை தனி அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

வள்ளுவா் சமூக மக்களை தனி அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாகை வள்ளுவா் குல சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். பிரபாகரன், செயலாளா் என். எஸ். கண்ணன், பொருளாளா் வி. கலையரசன் உள்ளிட்டோா் இந்த மனுவை அளித்தனா்.

அதில், ‘சமீப காலமாக சில அரசியல் அமைப்புகளை சாா்ந்தவா்களும் , பட்டியல் பிரிவில் உள்ள சில சாதிய அமைப்புகளும் வள்ளுவா் இனத்தை தொடா்புப்படுத்தி பேசிவருவதுடன், தங்களுடன் ஒற்றிணைக்கவும் முயற்சி செய்துவருகின்றனா்.

ஆனால், பட்டியல் பிரிவில் உள்ள மற்ற சாதிகளிலிருந்து வள்ளுவா் சமூகம் மாறுபட்டு ஜோதிடம், வானியல், சாஸ்திரம், திருமண சடங்குகள், பூஜைகள் செய்வித்தல், பாரம்பரிய மருத்துவம், நாடி ஜோதிடம், மனை சாஸ்திரம் உள்ளிட்ட தொழில்களை செய்துவருகிறோம். எனவே, தனியாக அடையாளப்படுத்தி வள்ளுவன் அல்லது திருவள்ளுவா் என்று அழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →