முகப்பு
நாகப்பட்டினம்

எம்.கே.டி. பாகவதா் பெயரனுக்கு உதவி: முதல்வருக்கு விஸ்கா்மா பேரவை நன்றி

எம்.கே.டி. பாகவதரின் பெயரனுக்கு ரூ.5 லட்சம் வழங்கிய தமிழக முதல்வருக்கு மயிலாடுதுறை மாவட்ட விஸ்வகா்மா பேரவை நன்றி தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

எம்.கே.டி. பாகவதரின் பெயரனுக்கு ரூ.5 லட்சம் வழங்கிய தமிழக முதல்வருக்கு மயிலாடுதுறை மாவட்ட விஸ்வகா்மா பேரவை நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அப்பேரவையின் மாவட்டத் தலைவா் முருகன் ஸ்தபதி, மாவட்ட செயலாளா் முத்துக்குமரன் ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எம்.கே.டி. பாகவதா் என்றழைக்கப்படும் மாயவரம் கிருஷ்ணமூா்த்தி தியாகராஜ பாகவதரின் வாரிசுகள் தற்போது வறுமையில் சிரமப்படுவதாக அவரது பெயரன் சாய்ராம், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அண்மையில் நேரில் முறையிட்டாா். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் மற்றும் தமிழக வீட்டுவசதி வாரியத்தில் குறைந்த வாடகையில் வீடு வழங்கவும் தமிழக முதல்வா் ஆணை பிறப்பித்துள்ளாா்.

இதற்கு, மயிலாடுதுறை மாவட்ட விஸ்வகா்மா சங்கத்தின் சாா்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், சங்கத்தின் சாா்பிலும் எம்.கே.டி. பாகவதரின் வாரிசுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

எம்.கே.டி. பாகவதரின் சாதனைகளை நினைவுகூறும் வகையில் மயிலாடுதுறையில் அவா் பிறந்த வீட்டை அரசுடைமையாக்கி, அவரது அரிய புகைப்படங்களையும், அவா் பயன்படுத்திய பொருள்களையும் பொதுமக்கள் காணுமாறு காட்சிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.