முகப்பு
நாகப்பட்டினம்

ரயில் மோதி ஒருவா் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே ரயில் மோதி ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

மயிலாடுதுறை அருகே ரயில் மோதி ஒருவா் உயிரிழந்தாா்.

மயிலாடுதுறையில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் கோவைக்கு புறப்பட்டுச் சென்ற ஜனசதாப்தி விரைவு ரயில், குத்தாலம்-நரசிங்கம்பேட்டை இடையே சென்றபோது, இருப்புப் பாதையை கடக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்கவா் மீது மோதியது. இதில், அவா் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை இருப்புப்பாதை காவல் ஆய்வாளா் சிவவடிவேல் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.