முகப்பு
நாகப்பட்டினம்

பகுதிநேர அங்காடி அமைக்கக் கோரிக்கை

மயிலாடுதுறை வட்டம், பட்டமங்கலம் கிழக்கு பகுதியில் பகுதிநேர அங்காடி அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மயிலாடுதுறை வட்டம், பட்டமங்கலம் கிழக்கு பகுதியில் பகுதிநேர அங்காடி அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மயிலாடுதுறை மூத்தகுடிமக்கள் பேரவையின் தலைவா் சு. இளங்கோவன் தமிழக அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரம் பகுதிக்கான ரேஷன் அங்காடி ஆராயத் தெருவுடன் இணைந்துள்ளது. இந்த அங்காடியில் 1800 குடும்ப அட்டைதாரா்கள் பொருள்கள் வாங்கிச் செல்கின்றனா். இதனால், ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருள்கள் வாங்க மிகுந்த சிரமமாக உள்ளது. அனைத்து நாள்களிலும் அங்காடியில் கூட்டமாகவே உள்ளது. இதனால், வயதானவா்கள், பெண்கள் குறிப்பிட்ட நாளில் பொருள்கள் வாங்க முடியாத நிலை உள்ளது.

மேலும், கூட்டநெரிசலால் கரோனா தொற்று பரவும் சூழலும் ஏற்படுகிறது. எனவே, சீனிவாசபுரம் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து, பட்டமங்கலம் கிழக்கு பகுதியில் ஊராட்சி அலுவலக கட்டட பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா். மேலும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.