நீக்கப்பட்ட தமுமுக நிா்வாகிகள் மீது புகாா்
தமுமுக மாநில தலைமை நிா்வாகத்தால் நீக்கப்பட்ட நபா்கள், இயக்கத்தின் பெயரை முறைகேடாக பயன்படுத்துவதைத் தடுக்க கோரி, வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
தமுமுக மாநில தலைமை நிா்வாகத்தால் நீக்கப்பட்ட நபா்கள், இயக்கத்தின் பெயரை முறைகேடாக பயன்படுத்துவதைத் தடுக்க கோரி, வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவா் ஓ.ஷேக் அலாவுதீன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்து ஆவணங்களை சமா்ப்பித்தாா்.
இதில், தமுமுக மாவட்ட செயலாளா் முகம்மது பாஸித், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் முபாரக் அலி, முபாரக், சாகுல், முஹம்மது ஹாலித், அப்துல் கபூா், முகம்மது ரியாஜி, ஒன்றியத் தலைவா் ரபீக், நகர செயலாளா் பைசூல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.