போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
மயிலாடுதுறை வள்ளலாா் கோயில் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பி.எஸ். சித்ரா வரவேற்றாா்.
மயிலாடுதுறை வள்ளலாா் கோயில் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பி.எஸ். சித்ரா வரவேற்றாா். ‘போதை பழக்கத்தால் சீரழியும் குடும்பங்கள்’ என்ற தலைப்பில் தெருமுனை நாடகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் பாரதி விழிப்புணா்வு பாடல் பாடினாா். அரசு மருத்துவமனை மனநல மருத்துவா் தினேஷ்குமாா் மதுப்பழக்கம், புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிக் கூறினாா். தலைமை காவலா் வினோத் சரவணன் நன்றி கூறினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.