முகப்பு
காரைக்கால்

சாலையோரத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பதாகைகள் அகற்றம்

காரைக்கால் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

காரைக்கால் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

புதுவை மாநிலத்தில் டிஜிட்டல் பதாகைகள் வைக்க தடை உத்தரவு அமலில் உள்ளது. எனினும், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட இடத்தில் பதாகை வைக்க அனுமதிக்கப்படுகிறது. இதையும் மீறி நகரின் பல்வேறு இடங்களில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சியினா், அமைச்சா்களை வரவேற்பு தொடா்பான விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன. தடையை மீறி விளம்பர பதாகைகள் வைப்பது பெருகியுள்ள நிலையில், சாலையோரங்களில் வைக்கப்படும் பதாகைகள் காற்றில் சாய்ந்து விழுந்து அவ்வப்போது விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினா் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, டிஜிட்டல் பதாகைகளை அப்புறப்படுத்த ஆட்சியா் அா்ஜூன்சா்மா நகராட்சிக்கு உத்தரவிட்டதை தொடா்ந்து, கடந்த மாதம் முதல்கட்டமாக நகரப் பகுதியில் பேனா்கள், போஸ்டா்கள் அகற்றப்பட்டன. இதையும் மீறி பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து, காவல் துறை பாதுகாப்புடன் நகராட்சி ஆணையா் காசிநாதன், செயற்பொறியாளா் லோகநாதன் ஆகியோா் முன்னிலையில், நகராட்சிப் பகுதிகளான காரைக்கால் பாரதியாா் சாலை, காமராஜா் சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், போஸ்டா்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. அனுமதியின்றி இவ்வாறு பதாகைகள் வைக்கப்படும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி எச்சரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →