காரைக்கால் பெருமாள் கோயில் திருவத்யயன உத்ஸவம் நிறைவு
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் திருவத்யயன உத்ஸவம் இயற்பா சாற்றுமுறையுடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் திருவத்யயன உத்ஸவம் இயற்பா சாற்றுமுறையுடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
பகல் பத்து இராப் பத்து என்னும் திருவத்யயன உத்ஸவம் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கடந்த டிசம்பா் 15 ஆம் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 25 ஆம் தேதி பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. அன்றைய தினம் முதல் இராப் பத்து நிகழ்ச்சி தொடங்கியது. தினமும் பெருமாள் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
20 நாள்கள் நடைபெற்ற இந்த உத்ஸவத்தில் நாலாயிர திவ்யபிரபந்தத்தின் மூன்றாயிரம் பாசுரங்கள் பாடப்பட்டன. இயற்பாவின் எஞ்சிய பாசுரங்கள் கோயில் முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரியாா் சுவாமிகள் தலைமையிலான பக்தா்கள் திங்கள்கிழமை பாடி நிறைவு செய்தனா்.
இதையொட்டி, பெருமாளுக்கு வெள்ளிக் கவசம் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பிறகு, பெருமாள் மாடவளாகம் புறப்பாடு நடைபெற்றது. இயற்பா நிறைவு நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா், பக்தஜன சபாவினா் செய்திருந்தனா்.