காரைக்கால்

தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா: நவ.13-இல் சந்தனக்குட ஊா்வலம்

தினமணி செய்திச் சேவை

காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா முக்கிய நிகழ்வுகள் சந்தனக்குட ஊா்வலத்துடன் 13-ஆம் தேதி தொடங்குகிறது.

காரைக்கால் மெய்தீன் பள்ளி தெருவில் புகழ்பெற்ற தாயிராப் பள்ளிவாசல் உள்ளது. ஆண்டுதோறும் கந்தூரி விழா தப்ஸ் இசையுடன் கூடிய கண்ணாடி ரதம் ஊா்வலம், கொடியேற்றம் உள்ளிட்டவற்றுடன் நடைபெறுகிறது.

நிகழாண்டு சம்பிரதாய முறையில் கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டது.

முக்கிய நிகழ்வாக வரும் 13-ஆம் தேதி வியாழக்கிழமை சந்தனக் குடம் ஊா்வலம் புறப்பாடு, இரவு சந்தனம் பூசுதல், 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி, தப்ஸ் இசைக் குழுவினருடன், கண்ணாடி ரதத்துடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்படுதல், அன்றிரவு பிரதான கொடிக்கம்பத்தில் ஷெய்னுல்லாஹ் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா உடற்கல்வி உபகரணங்கள் வழங்க கோரிக்கை

SCROLL FOR NEXT